சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மஜத உறுப்பினர் ஒய்.எஸ்.வி.தத்தா வலியுறுத்தினார்.

Updated On :12 ஜூன் 2013, 7:11 am

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மஜத உறுப்பினர் ஒய்.எஸ்.வி.தத்தா வலியுறுத்தினார்.

கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியது:

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு ஏராளமான தவறுகளைச் செய்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்க இயலாமல் போனது.

ஒரு காலத்தில் மத்தியில், தமிழகத்தில், கர்நாடகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தது. அப்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் சுமுகமான சூழல் இருந்தது. ஆனால், அப்போது மத்திய அரசு இதில் முனைப்புக்காட்டவில்லை என்று காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, பி.டி.சாவர்கர், ராமசாமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இப்படி பல்வேறு தவறுகளைச் செய்துள்ளோம். இனிமேலாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல், கர்நாடகத்தின் உரிமைகளை, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மாநில அரசு செயலாற்ற வேண்டும் என்றார் ஒய்.எஸ்.வி.தத்தா.