நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றும் சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்டிபிசி, செயில் உள்ளிட்ட 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது. இதற்கான உரிமங்களைப் பெற்ற பிறகும் பல நிறுவனங்கள் இன்னும் சுரங்கப் பணிகளைத் தொடங்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜே.எஸ்.பி.எல்., ஜி.வி.கே. பவர் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
அதைத் தொடர்ந்து, சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்.டி.பி.சி., செயில் உள்ளிட்ட மேலும் 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. உரிய விளக்கம் தராத பட்சத்தில் சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

