சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரி சியாராம் சிங் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இத்துடன், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் மீது கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சியாராம் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் சந்தீப் தேவ் தெரிவித்தார். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சியாராம் சிங், தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாவின் பாதுகாப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

