சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர்களின் சதி உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் கடந்த வாரம் நிகழ்த்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக தலைவர்களின் சதி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதனைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் பத்திரிகையான "ஆர்கனைசர்' கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், "பாஜக மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு காங்கிரஸார் தங்கள் கட்சியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் பலர், தேர்தல் ஆதாயத்துக்காக நக்சல்களுடன் கைகோத்தனர். நக்சல் தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு, நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பங்கேற்காதவர்கள், காலதாமதமாக வந்தவர்கள், முன்னதாகவே சென்றுவிட்டவர்கள் குறித்து அக்கட்சி விசாரித்தால் நக்சல் தாக்குதல் சதியில் யார் உள்ளார்கள் என்பது தெரியும். பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டும். நக்சல் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல், அவர்கள் நடத்திய தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம்
அடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது.
நக்சல்களுக்கு பணம், பொருள்கள் கொடுத்து உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் குற்றச்சாட்டு பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வதந்திகளின் உற்பத்தி மையமாகவும், சதிகளின் பிறப்பிடமாகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

