தில்லி முத்தமிழ்ப் பேரவை, தில்லித் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து தலைநகரில் மூன்று நாள்கள் நடத்தும் "பக்தி மற்றும் இசை விழா' வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், வேளுக்குடி கிருஷ்ணனின் பகவத் கீதை குறித்த ஆன்மிகச் சொற்பொழிவை ஏராளமான தில்லிவாழ் தமிழர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர்.
தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கனகா சுதாகர் நிர்த்திய பாரதி அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் ஷப்னா, ஆர்த்தி நாயர், அஸ்வதி நாயர், ரம்யா கண்ணன், அபிலாஷா, ராசி செüத்ரி, தீக்ஷிதா வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்ற பரத நாட்டியம் நடைபெற்றது.
கலைஞர்களுக்கு "தினமணி' ஆசிரியர் கே. வைத்திநாதன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, வேளுக்குடி கிருஷ்ணனுக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை உரையாற்றினார். தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலர் என். கண்ணன் வரவேற்புரையாற்றினார். கிருத்திகா ராஜராஜன் இறைவணக்கம் பாடினார்.
நிகழ்ச்சியை தில்லி முத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் கா. உலகநாதன் தொகுத்து வழங்கினார். தில்லித் தமிழ்ச் சங்க இணைச் செயலர் பெ. ராகவன் நாயுடு, தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொருளாளர் ராஜராஜன், இணைப் பொருளாளர் சந்தானம், தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ரமாமணி சுந்தர் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணனின் "ஸ்ரீ பகவத் கீதாசாரம்' என்ற தலைப்பில் பக்திச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த ஆன்மிக தொடர் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

