உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் உள்ள காங்கிரஸ் அது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இது விஷயமாக காங்கிரஸ் உயர்நிலைக் குழு தில்லியில் சனிக்கிழமை கூடியது.
இதில், உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த அடுத்த கட்ட முயற்சியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை திங்கள்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
அதில் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பொதுக் கருத்தை ஏற்படுத்த ஆளும் கூட்டணி முயற்சி மேற்கொள்ளும். அதற்கு முன்பாக தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டால், அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த இருக்கிறார்.
முன்னதாக நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
சோனியா காந்தியின் கனவுத் திட்டமாக உணவுப் பாதுகாப்பு மசோதா உள்ளது.
இதன்படி 67 சதவீதம் மக்களுக்கு ஒரே சீராக ரூ.1 முதல் 3-க்கு மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியம் நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்க இந்த மசோதா வகை
செய்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் பல்வேறு பிரச்னைகளால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

