முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-ஆவது நினைவு தினத்தையொட்டி தில்லி ராஜ்காட் அருகே உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான "வீர் பூமி'யில் செவ்வாய்க்கிழமையன்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
1991 மே 21-ஆம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது. ராஜீவின் நினைவாக தில்லி ராஜ்காட் அருகே "வீர் பூமி' என்ற பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

