காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகரின் ஈத்கா மைதானத்தில் பேரணி நடத்துவதற்காக ஹுரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் திட்டமிட்டனர். அவர்கள் முயற்சியை முறியடிக்கும் வகையில் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பிரிவினைவாதத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த மெüலானா அப்பாஸ் அன்சாரி, ஜாபர் அக்பர் பட், ஷாகிதுல் இஸ்லாம் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மீர்வாய்ஸ் முகமது ஃபாருக், அப்துல் கனிலோன் உள்ளிட்டோரின் மறைவு தினத்தையொட்டி பேரணி நடத்த ஹுரியத் அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஸ்ரீநகரில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் பள்ளிகள், கடைகள், இதர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களிலும் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

