எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கறைபடியாத நபர்களுக்கு வாக்களியுங்கள் என சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறினார்.
உத்தரகண்ட் மாநிலம், பித்ரோகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொதுமக்கள் தேர்தலின் போது தங்களுக்குள்ள வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும். கறைபடியாத நபர்கள், எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வாக்களியுங்கள். அரசியல் கட்சிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை.
கட்சி அடிப்படையிலான நடைமுறை நமது நாட்டு அரசியல் முறைக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டம் மக்களுக்காகத்தான் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்காக இல்லை. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் சாசன சட்டத்தையே ஆக்கிரமித்துக் கொண்டு அதிகாரத்தை தங்கள் வசம் எடுத்துக் கொண்டன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முறை இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.
கிராம சபைகள், கிராம சுயராஜ்ஜியம்தான் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
ஆனால் அரசியல்வாதிகள் இவற்றை தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்றார் ஹசாரே.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

