பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் சீனா எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என சீனப் பிரதமர் லீ கெகியாங்கிடம் ஆட்சேபம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கட்டுமான வளர்ச்சிப் பணிகளில் உறுதுணையாக இருப்போம் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்தக் கருத்து தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கக் கூடும். இது குறித்து லீ கெகியாங்கிடம் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளோம். சீனப் பிரதமரின் இந்தியப் பயணம் மூலம் இரு நாடுகளும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் லீ கெகியாங்கிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் குர்ஷித்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

