நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமரைக் காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்படியானால், மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி சனிக்கிழமை கூறுகையில், ""பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற அத்வானியின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை.
பாஜக தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்றார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோரும் பிரதமர் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

