மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில், ரஹீமா பீவி (31) மற்றும் அவரது ஒரு வயது மகன், மிது அலி (28) மற்றும் அவரது 6 மாத மகள் ஆகிய நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்துக்கு அக்குடும்பத்தின் மருமகன் தஹீர் அலிதான் காரணம் என்று அருகில் இருப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர், தனது மனைவி ரஹீமா பீவியின் தங்கையை திருமணம் செய்து கொள்வதற்கு அக்குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்குத் தீ வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு தஹீர் அலி தலைமறைவாகி விட்டதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

