சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகாராஷ்டிர பாஜக தலைவர் மகன் தற்கொலை

மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :2 மே 2013, 7:30 am

மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் காட்சேவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முக்தாய்நகரில் பூர்விக வீடு உள்ளது. இங்கு அவரது மகன் நிகில் காட்சே தன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, இறந்தார். அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜல்கான் நகரில் உள்ள கோதாவரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். அவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமேலவைத் தேர்தலில் தோற்றதால் மனமுடைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.