சர்ச்சைக்குரிய திருமணச் சட்டங்கள் திருத்த மசோதா அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: விவாகரத்தான பெண்ணுக்கு கணவரின் பரம்பரை சொத்திலும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட திருத்தங்களை திருமண சட்டத்தில் மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு இம்
மசோதாவை அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.
விவாகரத்தின் போது ஒரு பெண்ணுக்கு கணவனின் சொந்த குடியிருப்பு அல்லது பரம்பரரை சொத்தில் மனைவிக்கு பங்கு தர வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்தது.
அதே போல் திருமணத்துக்கு முன்பு கணவன் வாங்கிய சொத்து, பரம்பரை சொத்தில் மனைவிக்கு உரிய பங்கு தொடர்பான அம்சத்தை சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை தெரிவித்தது.
இவ்விரண்டு அம்சங்கள் குறித்து 2 மணி நேரம் மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இதில் கருத்தொற்றுமை ஏற்படாததால், அமைச்சர்கள் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து அக்குழு இறுதி செய்து அமைச்சரவைக்கு அனுப்பும் என்றார் சிதம்பரம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

