ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; 69 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் பதேர்வா பகுதியில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. இரட்டை நகரங்களான கிஷ்த்வார் மற்றும் தோடாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கிருந்த பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள், வணிக வளாகங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 32 பள்ளி மாணவர்கள் உள்பட 69 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தில்லி மற்றும் அதையொட்டியுள்ள நொய்டா, குர்கான், காஜியாபாத், ஃபரீதாபாத் பகுதிகள், இமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சுமார் 30 விநாடிகள் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
வட இந்தியாவில் கடந்த மாதம் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் வட மாநில மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டதைப் போலவே பாகிஸ்தானிலும் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

