கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப்போல சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
தென்கன்னட மாவட்டம், மங்களூரில் பன்ட்வால்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் பேசியது:
5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கின. வளர்ச்சி இல்லாவிட்டாலும் ஊழல் ஆட்சியைத் தந்துள்ளதன் மூலம் மக்களை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளனர். இதனால் மக்கள், பாஜகவுக்கு தக்கபாடம் புகட்டுவர்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும். அதிக இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, மஜதவை பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் பெற்றிருந்த வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

