மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறியது: பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள பேக்கர் ஆய்வகம் (இயற்பியல் துறை) மற்றும் வேறு சில துறைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுபாதிப் பர்மன் மற்றும் ஜெயந்தா ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தில்லியில் மேற்குவங்க நிதியமைச்சர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

