சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரசிடென்சி பல்கலைக்கழக வன்முறை: 2 பேர் கைது

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :12 ஏப்ரல் 2013, 6:58 am

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறியது: பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் உள்ள பேக்கர் ஆய்வகம் (இயற்பியல் துறை) மற்றும் வேறு சில துறைகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சுபாதிப் பர்மன் மற்றும் ஜெயந்தா ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. தில்லியில் மேற்குவங்க நிதியமைச்சர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடியுடன் வந்த சிலர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக இந்திய மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.