கன்னியாகுமரி-தில்லி நிஜாமுதீன் வாராந்திர திருக்குறள் எக்ஸ்பிரஸ் வெள்ளிக்கிழமையிலிருந்து (ஏப்ரல் 12) வாரமிருமுறை இயக்கப்படுகிறது.
"கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மாலை 7.15-க்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு முறையே வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு நிஜாமுதீன் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642) சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.20-க்கு நிஜாமுதீனிலிருந்து புறப்பட்டு முறையே திங்கள், புதன்கிழமைகளில் காலை 8.45-க்கு கன்னியாகுமரி சென்றடையும்' என்று ரயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
19 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் நிஜாமுதீனிலிருந்து ஆக்ரா கேன்ட், ஜான்சி, போபால், இடார்சி, பெதுல், நாக்பூர், பல்ஹர்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கன்னியாகுமரி செல்கிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

