மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
பாங்காங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்பிபிசி-ன் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில் குரியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது, ஏஎஃப்பிபிசி-ன் தலைவராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாஸýவோ ஃபுகுடா உள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக குரியன் பதவியேற்பார்.
பிராந்திய நாடுகளின் அரசுசாரா அமைப்பான ஏஎஃப்பிபிசி 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு உள்ளது. இந்தக் குழு, பிராந்திய நாடுகளின் பல்வேறு பிரச்னைகள், வளர்ச்சி உள்ளிட்டன குறித்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏஎஃப்பிபிசி-ன் செயல்பாடுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துக்கு தலைவராக குரியன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

