சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேணி பிரசாத் மீதான புகாரை விசாரிக்க பா.ஜ.க. கோரிக்கை

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர்

Updated On :2 ஏப்ரல் 2013, 6:31 am

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் கூறிய புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் திங்கள்கிழமை கூறியதாவது:

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் மீது மாநிலத்தின் மூத்த அமைச்சர் சிவ்பால் யாதவ் புகார்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்து விட்டன.

மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா பெயரில் அரசியல் நடத்தும் இரு கட்சிகளும் இதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றன?  இரு கட்சியினரும் மாறி மாறி புகார்களை கூறி வருவது அரசியலுக்கே இழுக்

காகும். பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் வேணி பிரசாத்தின் புகார் தொடர்பாகவும் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாதக்.