திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் சென்னை வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சோதனை நடத்தியதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ-யின் செயல்பாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசிய மன்மோகன் சிங், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டுள்ள இந்த வேளையில் அக்கட்சித் தலைவரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்
தியுள்ளது. இந்த சோதனை நடத்தப்பட்ட நேரம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக அறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சோனியா காந்தி அழைத்துப் பேசினார்.
அப்போது அவரிடம் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை குறித்து சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்தார். இத்தகவலை செய்தியாளர்களிடம் ஷிண்டே பின்னர் கூறினார்.
மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறை இணை அமைச்சர் வே. நாராயணசாமியிடமும் சிபிஐ செயல்பாடு தொடர்பாக சோனியா காந்தி அதிருப்தி தெரிவித்ததாக அவரது அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

