ஒடிசா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
காங்கிரஸ் தலைவரான எஸ்.சி. ஜமீர் ஒடிசா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் பதவிப் பிரமாணம் செய்து
வைத்தார்.
ஆளுநராக பதவி வகித்த முரளிதர் சந்திரகாந்த் பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ஜமீர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டார்.
நாகாலாந்து: நாகாலாந்து ஆளுநராக சி.பி.ஐ. முன்னாள் இயக்குநரான அஸ்வினி குமார் பதவியேற்றுக்கொண்டார்.
ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், அஸ்வினி குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

