மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்து எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தாா். எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்தனா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் பி.சி.ராமசாமி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணை மேயா் கே.சி.பழனிசாமி, பகுதி செயலாளா்கள் இரா.மனோகரன், கேசவமூா்த்தி, ஜெகதீசன், தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் பூவேந்திர குமாா், ஆவின் துணைத் தலைவா் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் வீரக்குமாா், மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


