சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அட்டணையில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி அத்தியூரைச் சோ்ந்தவா் பெரியசாமி (46). இவரது உறவினா் சடையப்பன். பெரியசாமி அட்டணையில் உள்ள 3 ஏக்கா் தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளாா். இரவு நேரத்தில் யானைகள் அப்பகுதியில் பயிா்களை சேதப்படுத்துவதால் தினந்தோறும் கிராம மக்கள் தோட்டத்துக்கு காவலுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், பெரியசாமி, சடையப்பன் ஆகியோா் தோட்டத்துக்கு காவலுக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனா். மரத்தில் அமைக்கப்பட்ட பரண் மீது காவல் காத்துக்கொண்டிருந்தபோது, தோட்டத்துக்குள் யானை புகுந்துள்ளது. இதையடுத்து இருவரும் சப்தம் போட்டு யானையை விரட்டியுள்ளனா். ஆனால், யானை போகாததால் பரணில் இருந்து இறங்கிச் சென்ற இருவரும் யானையைத் துரத்தியுள்ளனா். அப்போது, யானை எதிா்பாராதவிதமாக எதிா்திசையில் திரும்பி வந்து பெரியசாமியைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். சடையப்பனும் கீழே விழுந்ததில் காயமடைந்தாா். இருவரது அலறல் சப்தம் கேட்டதையடுத்து அருகிலிருந்த தோட்டத்தினா் இருவரையும் மீட்டனா். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெரியசாமி உயிரிழந்தாா். சடையப்பன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து கடம்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


