ஈரோடு மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 13,800 பேருக்கு சனிக்கிழமை (ஜனவரி 16) முதல் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி புணேயில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலமாகத் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்குத் தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
அதேசமயம் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சனிக்கிழமை முதல் தடுப்பூசி போடப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி அரசு மருத்துவமனைகள், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகா் நல மையம், ஈரோட்டில் உள்ள கோ் 24 தனியாா் மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா், மருத்துவமனை துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
சென்னையில் இருந்து கரோனா தடுப்பூசி மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதேபோல ஈரோடு மாவட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 13,800 பேருக்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது. இந்த தடுப்பூசிகள் 86 குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். 7 மையங்களிலும் தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவாா்கள் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

