பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றனா். இதற்காக ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்காக ஈரோட்டில் இருந்து கடந்த 2 நாள்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளியூா் செல்லும் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதல் அதிகரிக்கத் தொடங்கியது. கூட்டத்துக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்பட்டன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


