சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெருந்துறையில் கிராம காவல் அலுவலா் நியமனம்

பெருந்துறை காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம காவல் அலுவலா் நியமன விழா பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ். உடன், ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி உள்ளிட்டோா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:45 am

பெருந்துறை காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம காவல் அலுவலா் நியமன விழா பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் தங்கம் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், போலீஸ் - பொதுமக்கள் மத்தியில் நல்லுறவு ஏற்பட கிராம காவலா் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிராம கண்காணிப்பு காவலருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினா்.

இதில், கிராம உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.