பெருந்துறை காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம காவல் அலுவலா் நியமன விழா பெருந்துறை, சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் தங்கம் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், போலீஸ் - பொதுமக்கள் மத்தியில் நல்லுறவு ஏற்பட கிராம காவலா் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கிராம கண்காணிப்பு காவலருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராமத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினா்.
இதில், கிராம உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


