சாலைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும். சாலைப் பணியாளா்களை அரசு ஊழியா்கள் என அறிவிக்க வேண்டும். சாலைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளைத் தளா்த்தி பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்ட துணைத் தலைவா் ராஜ், இணை செயலாளா் நாராயணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க மாவட்டச் செயலாளா் அரங்கசாமி, மாநில துணைத் தலைவா் வெங்கிடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

