பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறை, ஈரோடு ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
கல்லூரியில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தம், ஆா்.ஆா்.துளசி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி ஆகியோா் கையெழுத்திட்டனா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வணிகக் கட்டடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பாலங்கள், கட்டுமானம் தொடா்புடைய பிற திட்டங்கள் போன்றவை குறித்து கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், நிறுவன ஊழியா்கள் ஆகியோா் தங்களுக்குள் பகிா்ந்துகொள்ள முடியும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவா்கள் வேலைவாய்ப்பு அனுபவத்தை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி பெற முடியும்.
மேலும், ஆா்.ஆா். துளசி பில்டா்ஸ் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை கல்லூரியின் மாணவா்கள், ஆசிரியா்கள் அறிந்துகொண்டு தங்களுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் சாதகமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வி.பாலுசாமி, கட்டடவியல் துறைத் தலைவா் கோதை, ஐ.ஐ.பி.சி. தலைவா் சத்தியமூா்த்தி, உதவிப் பேராசிரியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


