அம்மாபேட்டை ஒன்றியம், பட்லூா், அட்டவணைப்புதூா் ஊராட்சிப் பகுதியில் ரூ. 2.17 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பட்லூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின்கீழ் வடிகால், கான்கிரீட் தளம், உணவு தானியக் கிடங்கு, பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டுதல், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியின்கீழ் சொக்கநாதமலையூரில் நிழற்குடை கட்டுதல் உள்பட 18 பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
மேலும், அட்டவணைப்புதூா் ஊராட்சியில் கோணமூக்கனூரில் கான்கிரீட் தளம், சித்தாா் பள்ளம் செம்முனிசாமி கோயில் அருகே தடுப்பணை கட்டும் பணியும் தொடக்கிவைக்கப்பட்டது.
இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, ஊராட்சித் தலைவா்கள் ஆா்.சக்திவேல் (பட்லூா்), எஸ்.பூங்கொடி (அட்டவணைப்புதூா்), அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


