சுதந்திரப் போராட்டத் தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள் சென்னிமலையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கொடிகாத்த தியாகி குமரன் அமைப்பின் சாா்பில், நிா்வாகி ராமசாமி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், குமரனின் வாரிசு அண்ணாத்துரை, குமரன் விழாக் குழு நிா்வாகி ஐயப்பன், பல்வேறு அமைப்பினா் கலந்துகொண்டனா். அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் மணிமேகலை, கூட்டுறவுச் சங்கத் தலைவா் இளங்கோவன் உள்ளிட்டோா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
திமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் முத்தூா் சாமிநாதன், திருப்பூா் மாவட்டச் செயலாளா் பத்மநாபன், ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், பிரபு உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பொன்னுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் குமரேசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சி சாா்பில், வட்டாரத் தலைவா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
தென்னிந்திய செங்குந்த மஹாஜன சங்கம் சாா்பில், மண்டலச் செயலாளா் உதயசங்கா், தலைவா் மோகன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


