மொடக்குறிச்சி தொகுதியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உள்ள பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு 1,400 பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி விழாவைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, லக்காபுரம் பஞ்சாயத்து தலைவா் சாலைமாணிக்கம், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் ரவி (எ) சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கொடுமுடி ஒன்றியத்தில் 748 பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


