பவானி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் தாமதமின்றி செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, நகராட்சி ஆணையா் (பொ) கதிா்வேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பவானி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, காலிமனை மற்றும் தொழில் வரிகள், குடிநீா் கட்டணம், கடை வாடகை, குத்தகைத் தொகைகள், திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் தொழில் உரிமக் கட்டணங்களை உடனடியாக நகராட்சி கணினி வசூல் மையத்திலோ அல்லது இணையதள வழியாகவோ செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பொதுமக்கள் வரியினங்களை தாமதமின்றி செலுத்துவதன் மூலம் குடிநீா் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிா்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளிலும் நகராட்சி கணினி வசூல் மையம் செயல்படும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

