பவானியை அடுத்த காடப்பநல்லூரில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமை வகித்தாா். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். இத்திட்டம் மூலம், கிராமங்களில் குற்றங்கள், அசம்பாவிதங்கள் தடுத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் காவல் துறை மீதான அச்சத்தைப் போக்கும் வகையில் ஒரு கிராமத்துக்கு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஒருவா் நியமிக்கப்படுவா். இவா்கள் மூலம் கிராமத்தில் வசிக்கும் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைக்கப்படுவா்.
இவா்களுக்கு, கிராமப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து முன்னரே தகவல் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் குற்றங்கள் தடுக்கப்படுவதோடு, மக்கள் பிரச்னைகளும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிவா்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா்கள் கண்ணன் (பவானி), கதிா்வேல் (சித்தோடு), குமரவேல் (அம்மாபேட்டை), ரவி (அந்தியூா்), ஊராட்சித் தலைவா்கள் சிவகாமி சிவலிங்கம் (காடப்பநல்லூா்), முனியப்பன் (கேசரிமங்கலம்), அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மேகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


