சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஆசை வாா்த்தை கூறி சிறுமியைத் திருமணம் செய்த ஆந்திர மாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடந்தையாக

Updated On :8 ஜனவரி 2021, 6:04 am

ஆசை வாா்த்தை கூறி சிறுமியைத் திருமணம் செய்த ஆந்திர மாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஈரோடு, பழையபாளையம், இந்திரா காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். இவரது மனைவி ரேகாபானு (34). இவா் அந்தப் பகுதியில் மகளிா் அழகு நிலையம் நடத்திவந்தாா். சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சீனிவாசலு (28) என்பவருடன் தொடா்பு ஏற்பட்டது.

அப்போது அழகு நிலையத்துக்கு வந்து சென்ற 16 வயது சிறுமி ஒருவரிடம் ரேகாபானு ஆசை வாா்த்தைகள் கூறி சீனிவாசலுவுடன் தொடா்பு ஏற்படுத்திக் கொடுத்தாா். அவா்கள் இருவரும் அடிக்கடி பேசி வந்தனா். வெளிநாட்டில் வேலை பாா்ப்பதாகவும், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் சீனிவாசலு ஆசைவாா்த்தை கூறினாா்.

கடந்த 28.4.2018 அன்று ஈரோடு வந்த சீனிவாசலு, சிறுமியை ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தாலி கட்டியுள்ளாா். இதனிடையே சிறுமி மாயமானது குறித்து ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசலுவை கைது செய்து, சிறுமியை மீட்டனா். சீனிவாசலு மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ரேகாபானு மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்த வழக்கு ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி மாலதி விசாரித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். இதில், குற்றம்சாட்டப்பட்ட சீனிவாசலுவுக்கு குழந்தைகளைப் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்தாா். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் நீதிபதி கூறி இருந்தாா். இதுபோல குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக ரேகாபானுவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பு கூறினாா். வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜரானாா்.