கடம்பூா் மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் பழங்குடியினப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி. அடா்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள குன்றி கிராமத்தில் போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கா்ப்பிணியான பரமேஸ்வரிக்கு வெள்ளிக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சங்கா், மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி ஆகியோா் பரமேஸ்வரியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூா் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா். கடம்பூா் மலைப்பாதை மல்லியம் கோயில் அருகே பரமேஸ்வரிக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவியாளா் வெள்ளியங்கிரி பிரசவம் பாா்த்தாா். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து தாயும் சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

