சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 7:37 am

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சித்தோடு, குமிளம்பரப்பு துளசிபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி மகேஸ்வரி (23). பவானியில் உள்ள விஜயகுமாரின் தந்தை உயிரிழந்ததால், கடந்த மாதம் 20ஆம் தேதி குடும்பத்துடன் அங்கு சென்று விட்டனா். ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதியினா் மகேஸ்வரிக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வீடு திரும்பிய மகேஸ்வரி சென்று பாா்க்கையில் வீட்டிலிருந்த மூன்றரை பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.