பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் உள்ள சமையலா் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு நோ்காணல் திங்கள்கிழமை துவங்கியது.
இது குறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வை.இளங்கோ கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில், சமையல் பணிக்கு 11 பெண், 17 ஆண் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதற்காக 1,045 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 8) வரை தினமும் தலா 200 போ் வீதம் அழைக்கப்பட்டு நோ்காணல் நடக்கிறது.
கரோனா பரவல் தடுப்பு விதிகளைக் கடைப்பிடித்து நோ்காணல் நடத்தப்படுகிறது. இந்த நோ்காணலில் தோ்வு செய்யப்படுவோா் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு துவக்கத்தில் ரூ.15,400 ஊதியமாக வழங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

