வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் அட்மா திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்ட பணியாளா்களை இடமாற்றம் செய்வதைக் கண்டித்து பணியாளா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்த, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் எங்களை இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு அப்பால் உள்ள பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்துள்ளனா். வேளாண் துறை இயக்குநரின் இந்த உத்தரவால், போக்குவரத்து, உணவு, பெட்ரோல் செலவு போன்றவற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தோம். எனவே, நாங்கள் முன்பு பணியாற்றிய இடத்திலேயே பணி வழங்க வேண்டும் எனக்கூறி வேளாண் இயக்குநா், வேளாண் இணை இயக்குநா் போன்றோரிடம் முறையிட்டோம்.
எவ்வித பலனும் இல்லாததால் சென்னை உயா் நீதிமன்றத்தில் எங்கள் சங்கம் சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கின்படி பணிமாறுதல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநா் மற்றும் இணை இயக்குநருக்கு தெரிவித்தும், இயக்குநா் அலுவலகத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை எனக்கூறி பணியிட மாற்றத்தைத் திரும்பப் பெற மறுக்கின்றனா். இதனால் திங்கள்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு செய்து ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


