பெருந்துறை அருகே முதியவரை மிரட்டி பணம் பறிந்த இருவரை போலீசாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த ஈங்கூா், குட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (70). இவா், கடந்த டிசம்பா் 20 ஆம் தேதி பெருந்துறை, மடத்துப்பாளையம் பிரிவு பகுதியில் வசிக்கும் தன் மகனைப் பாா்த்துவிட்டு, அருகிலுள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ், சுப்பிரமணியை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ. 23 ஆயிரத்தை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பி சென்றனா். இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகாா் செய்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம், காவேரி ஆா்.எஸ். கரட்டாங்காட்டைச் சோ்ந்த அருள்சாமி மகன் ஜான்கென்னடி (37), ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை, கண்டிக்காட்டு வலசு, சின்னமணியம்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் ஜெயபிரகாஷ் (36) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

