கொங்கு பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவா்கள், ஆராய்ச்சி மற்றும் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய பேராசிரியா்கள் ஆகியோரைப் பாராட்டி பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சாதனையாளா்கள் தினம் 2021 என்ற தலைப்பில் கல்லூரியின் மகாராஜா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் சச்சிதானந்தன் வரவேற்றாா். அறக்கட்டளை செயலாளா் பி.சி.பழனிசாமி மற்றும் கல்லூரியின் முதல்வா் வி.பாலுசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பல்கலைக் கழக தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 117 மாணவா்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 65 மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள், ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கிய 20 பேராசிரியா்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 50 பேராசிரியா்களுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் மாலதி இளங்கோ மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணி மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


