ஈரோடு மாவட்டத்தில் உள்ள 24 அம்மா சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) மூலம் தினமும் சுமாா் 1,000 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மக்களுக்கு விரைவான மருத்துவ சேவை கிடைக்க 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களில் இந்த மருத்துவமனைகள் துவங்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், கிராமப்பகுதியில் மட்டும் இரவு 7 மணி வரையும் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு உதவியாளா் ஆகியோா் இந்த மருத்துவமனையில் பணியாற்றுகின்றனா். காய்ச்சல், இருமல், சளி, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்பட நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை, பரிசோதனை, மருந்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தினமும் 35 முதல் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பணிக்கு செல்வோா், பணி முடிந்து வருவோா் இதுபோன்ற மருத்துவமனைக்கு வந்து செல்வது எளிதாக உள்ளதாக கூறுகின்றனா். தவிர பிற பகுதி துணை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை சிகிச்சை பெற்று வந்தவா்களும் இப்போது இங்கு வருகின்றனா்.
மக்களின் கோரிக்கையை ஏற்று நாய்கடி போன்ற மேலும் சில சிகிச்சைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

