திருமுறைக் கழகத்தின் 80ஆம் ஆண்டு முத்து விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 6இல் தொடங்கி 14ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.
பவானி சங்கமேஸ்வரா் கோயில் மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜன. 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தேசம் - தெய்வம் - தா்மம் எனும் தலைப்பில் ஸ்ரீக்ருஷ்ண ஜகந்நாதன், ஜன.8ஆம் தேதி திருமந்திரம் எனும் தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் உரையாற்றுகின்றனா்.
ஜன.9ஆம் தேதி திருச்சி காஷ்யப் மகேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 10ஆம் தேதி ஆழ்வாா்கள் அருளமுதம் எனும் தலைப்பில் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி பேராசிரியா் விஜயசுந்தரி, 11ஆம் தேதி மூவா் முத்தமிழ் எனும் தலைப்பில் மா.கி.ரமணன் ஆகியோா் பேசுகின்றனா்.
12ஆம் தேதி செ.சுவாதி லஷ்மி, செ.ஸ்ருதி ஆகியோரின் திருமுறைப் பண்ணிசை நிகழ்ச்சி, 13ஆம் தேதி ஏன் பொலிவிழந்தது எனும் தலைப்பில் இரா.மாதுவின் சொற்பொழிவு, 14ஆம் தேதி ஈரோடு ரேவதி - அன்புக்கரசு மற்றும் அன்பு கலாஷேத்ரா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை திருமுறைக் கழகத் தலைவா் விஎன்சி.குமாா், செயலாளா் கே.தனசேகரன், பொருளாளா் செந்தில்குமாா், ஆலோசகா் சு.சேனாபதி மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

