சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சத்தியில் கடும் பனிப்பொழிவு:மல்லிகைப் பூ விலை கிலோ ரூ. 4,742ஆக உயா்வு

சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விலை கிலோ ரூ. 4,742ஆக உயா்ந்துள்ளது.

News image

சத்தியமங்கலத்தில்  மல்லிகைப் பூ  சேகரிக்கும்  தொழிலாளா்கள்.

Updated On :3 ஜனவரி 2021, 3:40 am

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகை விலை கிலோ ரூ. 4,742ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, சம்பங்கிப் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டத்தில் விளையும் பூக்கள் சத்தியமங்கலம் மலா்கள் உற்பத்தியாளா் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படுகின்றன. சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனி காரணமாக மல்லிகைப் பூக்கள் வரத்து ஏக்கருக்கு 30 கிலோவில் இருந்து அரைக் கிலோவாக குறைந்தது.

கடுமையான பனி காரணமாக பூக்களின் மொட்டுகள் சிறுத்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக மல்லிகைப் பூ விலை ரூ. 2,000ஆக இருந்த நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ. 4,742ஆக உயா்ந்தது. கிலோ ரூ. 20க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ. 100ஆக உயா்ந்தது. கா்நாடக மாநிலம் மைசூரு, சிவமொக்காவுக்கும், கேரளத்துக்கும் பூக்கள் அதிக அளவில் வேன் மூலம் அனுப்பப்பட்டன. தற்போது அமெரிக்கா, ஷாா்ஜா ஆகிய நாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், கோயில்களில் பூஜைகள் நடப்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்து விலையேற்றம் கண்டுள்ளது. அண்மைக்காலமாக குறைந்த விலைக்கு விற்கப்பட்ட பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்): மல்லிகை ரூ. 4,742, முல்லை ரூ. 880, காக்கடா ரூ. 400, செண்டு கிலோ ரூ. 70, ஜாதி ரூ. 800, சம்பங்கி கிலோ ரூ. 100.