ஈரோடு: வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவையின் மாநில பொதுச் செயலாளா் சூரியமூா்த்தி தலைமை வகித்தாா். மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தாா்.
வேளாளா் என்ற பெயரை வேறு சமூகத்துக்கு வழங்கக் கூடாது என்றும், வேளாளா் பெயா் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய மகாஜன சங்கத்தினா், மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில் பேரணியாக வந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
அதேபோல, பல்வேறு ஜாதி சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூா்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளா் லோகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


