சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சத்தியில் பகலிலும் விலகாத பனிமூட்டம்: விவசாயப் பணிகள் பாதிப்பு

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

News image

சத்தியமங்கலத்தில்  கடும்  பனிமூட்டம்  காரணமாக  முகப்பு  விளக்குகளை  எரியவிட்டபடி  செல்லும்  வாகனங்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 4:25 am

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் காலை 9 மணி வரை பூ சேகரிக்கும் பணி தடைபட்டது.