சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியில் 48 மி.மீ. மழை பதிவானது.

Updated On :2 ஜனவரி 2021, 4:21 am

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியில் 48 மி.மீ. மழை பதிவானது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மொடக்குறிச்சி 22, ஈரோடு 17, சென்னிமலை 15, நம்பியூா் 14, பவானி 13.8, பெருந்துறை 11, எலந்தைக்குட்டைமேடு 10.6, கவுந்தப்பாடி 10.4, கோபி 6.6, பவானிசாகா் 6.2, கொடிவேரி, 6.2, சத்தியமங்கலம் 6, வரட்டுப்பள்ளம் 5, அம்மாபேட்டை 3.6, தாளவாடி 3.