சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

என்.எஸ்.ஐ.டி தொழில்நுட்ப நிறுவனம் பல்கலைக்கழகமாக மாற்றம்

புது தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம் (என்.எஸ்.ஐ.டி), தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அந்தஸ்து வழங்க முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.

Updated On :11 ஜூன் 2013, 6:49 pm

புது தில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம் (என்.எஸ்.ஐ.டி), தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அந்தஸ்து வழங்க முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று முன்பு இருந்த தில்லி பொறியியல் கல்லூரி, தற்போது தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

என்.எஸ்.ஐ.டி கல்வி நிறுவனத்தில், கல்வி தரம் மாணவர்களிடையே தரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்துக்கு பல்கலை அந்தஸ்து வழங்கலாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் பேசும் போது முதல்வர் ஷீலா தீட்சித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்தியா டூடே-2012 சர்வேயின் படி நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.