சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இக்னோவில் உளவியல் படிப்பு

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.

Updated On :12 ஜூன் 2013, 9:28 pm

புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.

உளவியல் பட்டப் படிப்புக்கு சமீப காலமாக, பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் தேவைகள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் முழுநேரம் எம்.ஏ படித்த முதுகலை உளவியல் பட்டதாரிகளே XI, XII வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

மேலும் இந்தியாவில் உள்ள மறுவாழ்வு மையங்கள், மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஊனமுற்றோர் மையங்களில் பணி புரிவதற்கு, தகுதியான உள்வியல் துறை முதுகலை பட்டதாரிகள் தேவைப்படுகின்றன.

எனவே இதை கருத்தில் கொண்டு இக்னோ பல்கலைக்கழகம் தரமான கல்வி, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் இத்துறையில் மேற்படிப்பு படிக்க தவறிய மாணவர்களுக்கு உதவும் வகையில் அரிய வாய்ப்பினை இக்னோ அளித்துள்ளது.

இப்படிப்பு குறித்து மேலும் விரிவான விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது அருகில் உள்ள "ஸ்டடி சென்டரில்" விண்ணப்ப கையேடுகளை பெற்றுக் கொள்ளலாம். ரூ.200 கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் கையேடுகளை பெற ரூ.250 ஆகும். இக்னோ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.