புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், முதுகலையில் உளவியல் படிப்பு இந்தாண்டு முதல் வழங்கப்படுகின்றது.
உளவியல் பட்டப் படிப்புக்கு சமீப காலமாக, பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் தேவைகள் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான பள்ளிகளில் முழுநேரம் எம்.ஏ படித்த முதுகலை உளவியல் பட்டதாரிகளே XI, XII வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
மேலும் இந்தியாவில் உள்ள மறுவாழ்வு மையங்கள், மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஊனமுற்றோர் மையங்களில் பணி புரிவதற்கு, தகுதியான உள்வியல் துறை முதுகலை பட்டதாரிகள் தேவைப்படுகின்றன.
எனவே இதை கருத்தில் கொண்டு இக்னோ பல்கலைக்கழகம் தரமான கல்வி, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் இத்துறையில் மேற்படிப்பு படிக்க தவறிய மாணவர்களுக்கு உதவும் வகையில் அரிய வாய்ப்பினை இக்னோ அளித்துள்ளது.
இப்படிப்பு குறித்து மேலும் விரிவான விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது அருகில் உள்ள "ஸ்டடி சென்டரில்" விண்ணப்ப கையேடுகளை பெற்றுக் கொள்ளலாம். ரூ.200 கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் கையேடுகளை பெற ரூ.250 ஆகும். இக்னோ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

