புவனேசுவரம் ரசூல்கரில் உள்ள சபர் சாஹி பகுதியில் உள்ள தனது வீட்டில் நிதி நிறுவன பெண் அதிபரான பச்சன்சுதா பட்நாயக் (55) புதன்கிழமை நண்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கேபிடல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரைக் கடுமையாகத் தாக்கி கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளதாக போலீஸார் கூறினர். புவனேசுவரத்தில் மதுகான் நிதி நிறுவனத்தை பச்சன்சுதா நடத்தி வந்தார். அவரை வெளியாட்கள் கொன்றிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவரின் கணவர் மதுசரண் பட்நாயக் வேறுவிதமாக கூறினார். இந்த படுகொலையில் காலை வேளையில் பணியில் இருந்த பாதுகாவலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று மதுசரண் சந்தேகம் தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பிறகு அந்த பாதுகாவலர் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் அதிகாரி குறிப்பிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

